17வது திருத்தச் சட்டமூலம் பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையாது -தேர்தல் ஆணையாளர் தெரிவிப்பு..!
5 February 2010 செய்திகள்
17வது திருத்தச்சட்ட மூலம் இலங்கையின் இனப்பிரச்சனைக்கு தீர்வாக அமையாதென தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார் 11மணித்தியாலங்கள் கூடி ஆராயப்பட்டதன் பின்னர் இந்த 17வது திருத்தச்சட்டமூலம் அமுல்படுத்தப்பட்டதாகவும் இந்த சட்டமூலத்தில் பயனில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சட்டமூலத்திற்கு 225 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 215பேர் ஆதரவளித்தபோதிலும் இதனை நடைமுறைப்படுத்தும் சரியான பொறிமுறை குறித்து கவனம் செலுத்தப்படவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார் 1978ம் ஆண்டு அரசியல் சாசனத்தில் 17வது திருத்தச்சட்டமூலம் ஆகியன அவசரமாக ஏற்படுத்தப்பட்டதாகவும் இதனால் இதன் பலன்கள் குறித்து நம்பிக்கை கொள்ளமுடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். உரிய முனைப்புடன் குறித்த அரசியல் சாசன திருத்தங்கள் அமுல்படுத்தப்பட்டிருந்தால் பல்வேறு நன்மைகள் கிட்டியிருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
