இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண சிங்களவர்கள் விரும்பும் தமிழரிடம் அதிகாரத்தை வழங்கவும்-தயான் ஜயதிலக்க..!
5 February 2010 செய்திகள்
ட்ரான்ஸ்கரன்ட் இணையத்தளத்தில் கட்டுரையொன்றை எழுதியுள்ள ஜெனிவாவுக்கான முன்னாள் இலங்கையின் பிரதிநிதி தயான் ஜயதிலக்க, இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண்பதற்கு சிங்களவர்கள் விரும்பும் தமிழ் தலைவர் ஒருவரிடம் அதிகாரத்தை வழங்குவதன்மூலம் மாத்திரமே இனப்பிரச்சினைக்கு தீர்வுகாணலாம் என குறிப்பிட்டுள்ளார். இந்த தமிழ் தலைவர் யார் என எண்ணுவதில் சிரமமில்லை எனவும் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தவுக்கு அதிகாரத்தை வழங்க வேண்டும் என தயான் ஜயதிலக்க மறைமுகமாக கூறியுள்ளதாகவும் சிங்கள ஊடகமொன்று தெரிவித்துள்ளது. வடக்கு கிழக்கில் நடைபெறும் தேர்தல்களில் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றிபெறும் என கருதப்படுவதால், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு எப்படியேனும் வடமாகாணத்தின் அதிகாரத்தைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என தயான் ஜயதிலக்க வெளிப்படுத்தி யுள்ளதாகவும் அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது. அத்துடன் சிங்கள மக்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை ஏற்றுக் கொண்;;;;;டுள்ளனரா என ஜயதிலக்க உறுதியாக கூறவில்லை. சிங்கள மக்கள் விரும்பும் தலைவரிடம் மாத்திரம் அரசியல் அதிகாரத்தை வழங்க வேண்டும் என கூறியுள்ளதன் மூலம் தயான் ஜயதிலக்க தமிழ் தலைவரை தெரிவு செய்யும் அதிகாரத்தை சிங்களவர்களுக்கு வழங்கியுள்ளார்.
