பயங்கரவாதம் முற்றாக ஒழிக்கப்பட்ட நிலையில் வன்னி மாவட்டங்களான கிளிநொச்சியிலும் முல்லைத்தீவிலும் நாட்டின் 62வது சுதந்திரதினம் அனுஷ்டிக்கப்பட்டது.
5 February 2010 செய்திகள்
கிளிநொச்சி மாவட்ட செயலகம் உட்பட வன்னியிலுள்ள திணைக்களங்கள் அரச மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்கள் மற்றும் படைமுகாம்களில் தேசியக்கொடி ஏற்றப்பட்டு சுதந்திரதின நிகழ்வுகள் அனுஷ்டிக்கப்பட்டன. அந்தந்த நிகழ்வுகளில் திணைக்களத்தலைவர்கள் அரச அதிகாரிகள் படை அதிகாரிகள் தேசியக்கொடியை ஏற்றி சுதந்திரதின நிகழ்வுகளை சிறப்பித்ததாக வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன. கிளிநொச்சி உட்பட துணுக்காய் மல்லாவி கனகராயன்குளம் பூநகரி மற்றும் மாங்குளம் பிரதேசங்களிலும் சுதந்திரதின நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
