தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை பார்வையிடுவதற்காக ஜனாதிபதி மகிந்த ராஐபக்ச அவர்கள் மருத்துவமனைக்கு நேரடி விஐயம்!
3 March 2010 செய்திகள்
ஜனாதிபதி மகிந்த ராஐபக்ச அவர்கள் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை பார்வையிடுவதற்காக இன்றைய தினம் மதியம் மருத்துவமனைக்கு நேரடியாகவே விஐயம் செய்தார்.
அங்கு சென்ற ஜனாதிபதி அவர்கள் செயலாளர் நாயகம் அவர்களை ஆரத்தழுவி அவரது உடல் நிலைகளை விசாரித்துக் கொண்ட ஜனாதிபதி மகிந்த ராஐபக்ச அவர்கள் செயலாளர் நாயகம் அவர்களை கவனித்து வரும் வைத்தியர்களிடமும் அவரது உடல் நிலை குறித்து கேட்டறிந்ததோடு தொடர்ந்தும் விஷேட கவனிப்புக்களை செலுத்துமாறும் ஜனாதிபதி மகிந்த ராஐபக்ச அவர்கள் வைத்தியர்களுக்கு பணிப்புரை வழங்கினார்.
