ஜெனரல் சரத் பொன்சேகாவின் பாரியார் அனோமா பொன்சேகா கணவரின் சார்பில் பிரச்சாரம்..!
6 March 2010 செய்திகள்
ஜெனரல் சரத் பொன்சேகாவின் பாரியார் அனோமா பொன்சேகா, தமது கணவரின் சார்பில் நாடு முழுவதிலும் தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளதாகத் கூறப்படுகிறது. வடக்கு - கிழக்கு உள்ளிட்ட நாட்டின் சகல பாகங்களிலும் தேசிய ஜனநாயக கூட்டமைப்பினால் நடத்தப்படும் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளதாக அவர் கூறியுள்ளார். தற்போது சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமது கணவரின் சார்பில் தாமே பிரசாரங்களை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். நீதி, நேர்மை மற்றும் நியாயத்தை நாட்டில் நிலைநாட்டும் நோக்கில் தாம் செயற்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
