நிபுணர்கள் குழுவானது பான்கீ மூனுக்கே ஆலோசனை வழங்கவுள்ளது -அமைச்சர் போகொல்லாகம..!
7 March 2010 செய்திகள்
ஐ.நா செயலர் பான் கீ மூன் இலங்கையின் பிரச்சனைகள் மற்றும் போர்குற்றம் தொடர்பாக நியமிக்கவுள்ள நிபுணர்கள் குழு இலங்கை அரசுக்கு ஆலோசனை வழங்காதெனவும் அது பான் கீ மூன் அவர்களுக்கே ஆலோசனை வழங்குமெனவும் வெளிவிவகார அமைச்சர் றோகித போகல்லாகம தெரிவித்துள்ளார். ஐனாதிபதிக்கும் பான் கீ மூனுக்குமிடையே நேற்று முன்தினம் காலை தொலைபேசி உரையாடல் இடம்பெற்றபோது இக்குழு தொடர்பாகவும் இலங்கை பிரச்சனை தொடர்பாகவும் ஆராயப்பட்டதாகவும் இக்குழு அரசுக்கு ஆலோசனை வழங்க அமைக்கப்படவில்லை எனவும் பான்கீ மூன் தெரிவித்ததாக போகொல்லாகம மேலும் தெரிவித்துள்ளார்.
